ஆடி அமாவாசை பூஜை: ஜெ.வுக்காக அகஸ்தியர் கோவிலில் வழிபட்ட சசிகலா
சென்னை: அதிமுக தலைமை தன்னை தாக்கியதாக ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா கூறிய குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆடி அமாவாசை தினமான நேற்று தியாகராய நகரில் உள்ள அகஸ்தியர் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.நகர் ராஜா தெருவில் உள்ள அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில். பழமையான கோயில், தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆடி அமாவாசை நாளில் சித்தர்களை வணங்குவது நன்மை தரும் என்பது நம்பிக்கை அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வந்து சசிகலா வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமையன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, தான் ராஜினாமா செய்ய மிரட்டப்படுவதாகவும், கட்சித்தலைமை தன்னை தாக்கியதாகவும், அதிமுக தலைமைக்கு எதிராக குற்றம் சாட்டினார். அன்றைய தினத்தில் ராஜ்யசபாவிற்குள் இருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல மொத்த இந்தியாவையும்,அத்தனை அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது.
போயஸ்கார்டனில் அடிப்பதும் அடிவாங்குவதும் சாதாரணம் என்பது போல பேசினர். அதிமுக தலைமையின் அணுகுமுறை பற்றிய பல்வேறு கேள்விகளையும் இது எழுப்பிய நிலையில் அதிமுக தலைமை மீதான இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைமை கருதுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ஜோதிடர்களின் ஆலோசனைப்படி சசிகலா நடராஜன் திநகர் அகஸ்தியர் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
சசிகலா நடராஜன் பவுர்ணமி தினங்களில் திருவான்மியூர் பாம்பன் சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில் அகஸ்தியர் கோவிலில் வழிபட்டுள்ளார் சசிகலா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications