நடந்தது கைகலப்பு அல்ல.. தாக்குதல்- திருச்சி சிவா அதிரடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கை கலப்பு நடந்ததாக கூறப்படுவது தவறு. நடந்தது தாக்குதல் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் வைத்து நேற்று திருச்சி சிவாவை, அதிமுக ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சரமாரியாக அடித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிவா போலீஸில் புகார் ஏதும் தரவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த திருச்சி சிவாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது கைகலப்பு என்று செய்தி போடுகிறார்கள். நடந்தது தாக்குதல்.
அரசை விமர்சித்துப் பேசினால், அரசின் குறைகளை சொல்லிப் பேசினால் பொது இடத்தில் தாக்குவதுதான் நியாயமா. இதுதான் அதிமுக அரசு கடைப்பிடிக்கும் புதிய கலாச்சாரமா என்று கேட்டார் திருச்சி சிவா.












Click it and Unblock the Notifications