திடீரென தனிக்கட்சி தொடங்கும் சசிகலா புஷ்பா! மார்ச் 26-ல் கட்சி பெயர் அறிவிப்பு!!
அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தனிக்கட்சியை தொடங்கவுள்ளார். வரும் 26-ந் தேதி புதிய கட்சியின் பெயரை சசிகலா புஷ்பா அறிவிக்க உள்ளார்.
தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்..பி. சசிகலா வரும் 26-ந் தேதியன்று புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்டவர் சசிகலா புஷ்பா. அதிமுக மகளிரணிச் செயலாளர், தூத்துக்குடி மேயர் என பல பொறுப்புகள் வகித்தவர்.
பின்னர் அதிமுக ராஜ்யசபா உறுப்பினராக கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்வானார். இந்நிலையில் திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெகுங்கி இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது ஜெயலலிதாவின் காதுகளை எட்டியது.

திருச்சி சிவாவுக்கு அறை
ஆனாலும் கட்சிக்கு அவர் ஆற்றிய பணிகளை கருத்தில் கொண்டு அவரை எச்சரி்த்து அனுப்பினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அறைந்தார்.

ராஜ்யசபாவில் புகார்
இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா விசாரணை நடத்தியிருந்தார். பின்னர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சசிக்கு எதிராக
தற்போது சசிகலாவுக்கு எதிராகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குரல் கொடுத்து வருகிறார். அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததற்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் சசிகலா புஷ்பா புகார் கொடுத்துள்ளார்.

தனிக்கட்சி
இந்த நிலையில் திடீரென புதிய கட்சியை சசிகலா புஷ்பா தொடங்க உள்ளார். வரும் 26-ம் தேதி புதிய கட்சிக்கான அறிவிப்பை சசிகலா புஷ்பா அறிவிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications