ஒரு பெண்ணிடம் இந்த மாதிரி கேக்குறீங்களே.. எந்த மீடியாங்க நீங்க? நிருபரிடம் சீறிய சசிகலா புஷ்பா
நெல்லை: நிருபர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, ஒரு பெண்ணிடம் இப்படி கேட்கக்கூடாது என கடிந்து கொண்டார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார்.
இதன்பிறகு வெளியே, நிருபர்களிடம் பேசும்போது, தனது பதவியை பறித்து வேறு யாருக்கோ தர ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும், எனவே வேண்டுமென்றே வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்பி அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
சம்மந்தம் இல்லை
திருச்சி சிவாவை தான், அடித்ததற்கும், தன்னை பதவியை ராஜினாமா செய்ய சொல்வதற்கும் எந்த காரணமும் கிடையாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

திட்டமிட்ட வேலை
திருச்சி சிவா விவகாரத்தை தனது ராஜினாமா நாடகத்திற்கு அதிமுக தலைமை பயன்படுத்திக்கொண்டதாகவும், இது திட்டமிட்ட காய் நகர்த்தல் எனவும் அவர் கூறினார்.

நிருபர் கேள்வி
அப்போது ஒரு நிருபர், நீங்கள் மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஜெயலலிதா உங்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார்.

சரியான கேள்வி தேவை
இந்த கேள்வியால் சசிகலா புஷ்பா ஆத்திரமடைந்தார். சரியான கேள்வியை என்னிடம் கேளுங்கள். இதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது.

எந்த மீடியா நீங்க
நான் ஒரு பெண்மணி. என்னிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டுமோ அப்படித்தான் கேட்க வேண்டும் என்று புஷ்பா கூறியதோடு, யாரு இவர், எந்த மீடியா என கேள்வி கேட்க ஆரம்பித்தார். அப்போது உடனிருந்த சீனியர் நிருபர்கள், "விடுப்பா, பர்சனல் கேள்வியெல்லாம் வேண்டாம்.." என கூறி அடுத்த கேள்விக்கு நகர்ந்தனர்.












Click it and Unblock the Notifications