ஜெயலலிதா மரணம்: பி.எச் பாண்டியன் பேட்டியால் பிபி எகிறிய சசிகலா... அதிர்ந்த போயஸ் கார்டன்
ஜெயலலிதா மரணம் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் அளித்த பேட்டியால் சசிகலா அதிர்ச்சியில் உறைந்தாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரனின் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாம்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து பகீர் தகவல்களை பிஎச் பாண்டியன் வெளியிட்டதை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்துபோனாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை செய்தியாளர்களை சந்திக்க சசிகலா உத்தரவிட்டாராம்.
முதல்வர் நாற்காலியில் சசிகலா அமருவது உறுதியாகிவிட்ட நிலையில் வரலாறு காணாத எதிர்ப்பும் கொந்தளிப்பும் தமிழகத்தில் நிலவி வருகிறது. சசிகலா மீது மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
தற்போது ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இப்பேட்டியை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்து போனாராம். மன்னார்குடி உறவினர்களிடம் வழக்கத்தைவிட உரத்து குரலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையனை அழைத்து பி.எச். பாண்டியனுக்கு பதில் தர பிரஸ் மீட் நடத்துங்க என காட்டமாக கூறியுள்ளார். இதன் பின்னரே அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்களாம்.