சிறையைவிட்டு வெளியே வந்து ஓய்வெடுக்க பலே நாடகத்தை கையிலெடுக்கும் சசி!
பெங்களூரு சிறைவாசத்தை அனுபவிக்க முடியாமல் தத்தளிக்கும் சசிகலா பலே நாடகம் ஒன்றை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளாராம்.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா உடல்நிலை சரியில்லை என நாடகமாடி பெங்களூரு மருத்துவமனையில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலர், முதல்வர் பதவியை சசிகலா நெருங்க நெருங்க... சின்னம்மா சின்னம்மா என்ற சரணகோஷம் உச்சஸ்தாயில் இருந்தது. ஆனால் பெங்களுரு சிறைக்குள் சசிகலா அடைக்கப்பட்டதுதான் தாமதம்..
சின்னம்மாவை தூக்கி எறிந்துவிட்டு 'மக்களின் செல்வர்' என ஃபெரா குற்றவாளி டிடிவி தினகரனுக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறது அடிமைகள் கூட்டம். ஆர்கே நகர் இடைத் தேர்தலில் ஒரு கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் படத்தைக் கூட பயன்படுத்த முடியாத அச்சத்தில் இருக்கிறது டிடிவி தினகரன் தரப்பு.

மிதப்பில் தினகரன்
அத்துடன் கட்சியிலும் ஆட்சியிலும் தாமே என்கிற நிலைக்கு வந்துவிட்டாராம் தினகரன். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வென்றால் முதல்வர் பதவிதான் என மிதப்பில் இருக்கிறாராம் தினகரன்.

நாடகமாட முடிவு
இதனால் ரொம்பவே வெறுத்துப் போன சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமக்கு உடல்நிலை சரியில்லை என நாடகமாடி 15 நாட்கள் பெங்களூரு மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

விரைவில் அரங்கேற்றம்
இதற்காக தமது வழக்கறிஞர்கள் மூலம் தீவிரமான முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறாராம். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிந்த பின்னர் இந்த உடல்நிலை சரியில்லை நாடகம் அரங்கேறப் போகிறதாம்.

இளவரசி அப்செட்
அதே நேரத்தில் சசிகலாவைப் போல தம்மையும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் இளவரசி. ஆனால் வழக்கறிஞர்களோ, இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கேட்டால் அனுமதி கிடைக்காது; கொஞ்சம் பொறுத்திருங்கள் என கூறிவிட்டனராம். இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளாராம் இளவரசி.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications