பரோல் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்புவது ஏன்?
பரோல் காலம் முடிய 3 நாட்களுக்கு முன்பாக சசிகலா சிறைக்கு செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: பரோல் காலம் முடிய 3 நாட்களுக்கு முன்பாக சசிகலா சிறைக்கு செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக பரோலில் வெளியே வந்தார் சசிகலா.

கணவர் மறைவு
கணவரின் இறுதிச்சடங்கு மற்றும் ஈமச்சடங்குகளில் பங்கேற்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அவரது பரோல் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவடைவதாக தகவல் வெளியானது.

பல்வேறு கேள்விகள்
இந்நிலையில் சசிகலா இன்றே பெங்களூரு சிறைக்கு புறப்பட்டுவிட்டார். அவர் முன்கூட்டியே சிறைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சசிகலா மும்முரம்
பொதுவாக நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே கைதிகளை விடுவிக்கும் நடைமுறை சிறைச்சாலைகளில் உள்ளது. இதைப் பயன்டுத்தி தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை ஆவதில் சசிகலா மும்முரமாக உள்ளார்.

பாராட்டைப் பெற
இதன் ஒரு பகுதியாகவே பரோல் காலத்திற்கு முன்பு சசிகலா சிறைக்குத் திரும்புவதாக கருதப்படுகிறது. அதாவது, பரோல் காலத்திற்கு 3 நாட்கள் முன்னதாகவே திரும்பினால், சிறை நிர்வாகத்தின் பரிவைப் பெற முடியும். பாராட்டைப் பெற முடியும்.
அது நன்னடத்தையாகவும் கருதப்படக் கூடும்.

வாதிடலாம்
நாளை முன்கூட்டியே விடுதலை கோரி கோரிக்கை வைத்தால் கூட இதை சுட்டிக் காட்ட முடியும். சிறை நிர்வாகத்தில் விதிகளை தவறாமல் கடைபிடித்ததாக பேசமுடியும். மேலும் சொன்ன நாளுக்கு முன்பே சிறைக்கு வந்துவிட்டதாகவும் ஒழுங்குடன் நடந்து கொண்டதகாவும் வாதிட முடியும்.

மனதில் வைத்தே
எப்படியாவது சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியே வர வேண்டும் என்ற முடிவில் உள்ள சசிகலா இவற்றையெல்லாம் மனதில் வைத்தே முன்கூட்டியே சிறைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications