சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார்: அமைச்சர் ஆர்பி. உதயகுமார்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சசிகலா ஏற்கனவே அதிமுக அறிந்த தலைமைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சசிகலா ஏற்கனவே அதிமுகவின் புதிய தலைமை அல்ல ஏற்கனவே அறிந்த தலைமைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது சசிகலா அதிமுகவின் புதிய தலைமை அல்ல என்று கூறிய அமைச்சர் உதயகுமார், அவரது தலைமை ஏற்கனவே அதிமுக அறிந்த ஒன்றுதான் என்றார். மேலும் தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதலமைச்சராக மக்கள் பணியாற்றுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த புத்தாண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்த புதிய தலைமை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications