எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. நினைவு தபால் தலை, நாணயம் வெளியிட மோடிக்கு சசியும் கோரிக்கை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் நினைவு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான, எம்ஜிஆருக்கு வரும் 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டை கொண்டாடுவது என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்ஜிஆர் படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து சில மணி நேரங்களிலேயே இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications