காவிரி வழக்கு: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது- அய்யாக்கண்ணு
மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி விவகாரத்தை மேலும் 6 நாட்கள் தாமதப்படுத்தி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்வதாக உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், கர்நாடக சட்டசபைத் தேர்தலால் இந்த விவகாரத்தில் சரியான முடிவெடுக்க முடியவில்லை என்கிற மத்திய அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் விசாரணையை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு அறிக்கையும் மே 14ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு பேசுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே இந்த உத்தரவு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் நடந்துகொள்கின்றன. காவிரி விவகாரத்தை மேலும் 6 நாள் தாமதப்படுத்தி இருப்பது கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக தமிழகம் கண்முன்னே பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications