விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்தனர்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர் என விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக விவசாயிகள் தற்கொலைகள் தொடர்பான பொதுநலன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற விவரங்களை 3 வார காலத்துக்குள் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications