ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்த அப்பீல் மனுக்கள் மீது ஜனவரியில் தீர்ப்பு....சு.சுவாமி
கோவை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரியில் வரும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு சீட்தான் கிடைக்கும் நிலை உள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைமை தேவை. புதிய செயற்குழு, பொதுக்குழு அவசியமாகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வர உள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் உரிய ஏற்பாடுகளை செய்யாமல் விட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசு இதை சரி செய்ய முயற்சிக்கிறது. சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலராகும் தகுதி இல்லை என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியினர் சோனியாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என சொல்ல வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.












Click it and Unblock the Notifications