பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : சி.பி.ஐ விசாரணை கோரும் கல்வியாளர்கள்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து கல்வியாளர்கள் சி.பி.ஐ விசாரணை கோரி உள்ளனர்.
சென்னை: தமிழக அரசு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மோசடி நடந்திருப்பதாகவும் இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1058 இடங்களுக்கான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த தேர்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்த தேர்விற்கான முடிவு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் 2200 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும் அரசு சார்பில் தகவல் வெளியானது.
ஆனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சிலரின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பார்த்த போது, தவறாக எழுதப்பட்ட வினாக்களை அழித்துவிட்டு சரியான விடை எழுதப்பட்டு திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் காரணமாக தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வியாளர் பாடம் நாரயணன், பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. இதனால், முறையாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலம் வீணாகி உள்ளது. மேலும், அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மீது இருந்த நம்பிக்கையும் கேள்விக்குரியாகி உள்ளது.
இதனால், இந்த முறைகேடு விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதில் சம்பந்தப்பட்டு உள்ள அதிகாரிகளை அதுவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications