விடிய விடிய கனமழை... தமிழகத்தில் பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, நாகை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை பெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இதேபோல தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, நாகை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுறை விடப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைத்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விடுமுறை

புதுச்சேரியில் விடுமுறை

தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. மீண்டும் கனமழை தொடர்வதால், புதுச்சேரியில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வுகள்

அரையாண்டு தேர்வுகள்

தீபாவளிக்குப் பின்னர் நீண்ட விடுமுறை விடப்பட்டு கடந்த வியாழக்கிழமைதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+