For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலையில் பள்ளி... மாலையில் பாலியல் தொழில்... சிறுமிகளை பலாத்காரம் செய்த போலீசார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் 3 ஆண்டுகளாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டுள்ளதோடு 3 ஆண்டுகளாக சீரழித்த பட்டாலியன் போலீஸ்காரர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் எஸ்ஐ முதல் ஏடிஜிபி வரை போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கும் விவகாரம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரை சம்பவத்தில் போலீசாருக்கு தொடர்பிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில், கடந்த 2 நாட்களுக்கு முன் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிறுமியை வைத்து விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது. 16 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர் 9ம் வகுப்பு படித்து வருவதும், அவரை கட்டாயப்படுத்தி 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும், பட்டாலியன் போலீஸ்காரர் உள்ளிட்டோர் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார்.

School girl rape case: 12 arrested in Madurai

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெற்கு மகளிர் போலீசார், பழநி சிறப்பு காவல் படை பட்டாலியன் போலீஸ் பிரசன்னஜித், புரோக்கர்களான ஷகிலாபானு, செல்வி, முத்து இருளாயி, மீனாட்சி உள்பட 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் போலீசாரின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது, மற்றொரு சிறுமி பாலியல் விவகாரத்தில் தள்ளப்பட்டிருப்பதும், அதில் ஒரு போலீஸ்காருருக்கு தொடர்பிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புரோக்கர்களான 4 பெண்களும், சிறுமியின் தாயின் துணையோடு 13 வயதிலேயே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். முதலில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தங்கபாண்டி, அவரது அண்ணன் சுந்தரபாண்டி ஆகியோர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அரசு பஸ் நடத்துனர் பிராங்க்ளின் ஞானதாஸ் டேவிட், முத்துகணேசன் ஆகியோர் சிறுமியை சீரழித்துள்ளதாக கூறியுள்ளார் மதுரை காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ்,

சிறுமியின் வறுமையை பயன்படுத்தி, ஜெய்ந்த்புரத்தைச் சேர்ந்த சகிலாபானு, மேல அண்ணாத்தோப்பைச் சேர்ந்த செல்வி, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் முத்து இருளாயி, திருமங்கலம் மீனாட்சி ஆகிய 4 விபசார பெண் புரோக்கர்கள் அந்த மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்து உள்ளனர். அதன்பின் அவர்கள், அந்த மாணவியை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு லாட்ஜிற்கு அனுப்பி விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தங்கபாண்டி, அவரது அண்ணன் சுந்தரபாண்டி, பிராங்க்ளின் ஞானதாஸ் டேவிட், முத்துகணேசன் ஆகியோர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதன்பின் அவர்கள் அந்த மாணவியை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜில் பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். அப்போது தான் மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.

அந்த பெண் புரோக்கர்களுக்கு லாட்ஜ் மேலாளர் சேவியர், பிரபாகரன், சையதுஅலி. பிரசன்னஜித் ஆகியோர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து பெண் விபசார புரோக்கர்கள் 4 பேர் உள்பட அவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவர் அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவராம்.

கடந்த 3 ஆண்டுகளாக சிறுமியை காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இரவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பழநி பட்டாலியன் போலீசாக பணியாற்றி வரும் பிரசன்னஜித் ஆகியோரும் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் கூறியுள்ளார். இதன்பேரில், பிரசன்னஜித் உள்பட 12 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிவகாசி ஜெயலட்சுமி, சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு என போலீசாரின் புகழ்! பரவி வரும் நிலையில் மதுரை பள்ளி மாணவி பலாத்கார வழக்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In the Madurai minor girl raped case,12 arrested including 4 broker and police yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X