விருதுநகரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பள்ளி மாணவி மரணம்
ராஜபாளையம்: விருதுநகரில் பள்ளியில் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி. அருகில் உள்ள அரசு பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்தார். இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று பள்ளியில் சத்துணவு சமையல் செய்து கொண்டிருக்கும் போது கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம் தனியார் ம்ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்து உயிரிழந்தது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் பேரில் சத்துணவு அமைப்பாளர் இந்திரா, சமையலர் திருக்கொடி, உதவியாளர் சுந்திரலெட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications