For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6-ம் வகுப்பு மாணவி தீ குளி்த்து தற்கொலை.. தருமபுரி அருகே சோகம்

தருமபுரி அருகே பள்ளி மாணவி தீ குளி்த்து தற்கொலை செய்துகொண்டார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி அருகேயுள்ள சின்னகம் பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தருமபுரி மாவட்டம் சின்னகம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம், இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மகள் தர்ஷினி (11) அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

 school student suicide at Dharmapuri

இந்தநிலையில் நேற்று முந்தினம் வழக்கப்போல பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தர்ஷினி , வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது ஊடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். சத்தம் கேட்டு வந்த அவரது உறவினர்கள் தர்ஷினியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் தர்ஷனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தருமபுரி டவுன் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். தர்ஷினி சம்பவத்தன்று அதிகமாக யாருடனும் பேசவில்லை. தன்னிடம் உள்ள பென்சில், பேனா போன்றவற்றை தனது நினைவாக வைத்து கொள்ளுமாறு தோழிகளிடம் அவர் கொடுத்திருக்கிறார்.

மேலும் நாளை முதல் நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று அந்த சிறுமி தனது தோழிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த தர்ஷனி உடலில் மண்ணெண்னை ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
6th class girl student suicide at Dharmapuri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X