பெஷாவர் தாக்குதல்.. மெழுகுவர்த்தி மனித சங்கிலி அமைத்து சென்னை பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் மற்றும் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை வேலம்மாள் பள்ளியில் மாணவ, மாணவியர் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி அமைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

School students form Human candle

பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டனர். இதில் 132 பேர் 16 வயதுக்குட்பட்ட பள்ளிப் பிள்ளைகள்.

School students form Human candle

மிகக் கொடூரமான இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மட்டுமல்ல உலக நாடுகளும் கூட அதிர்ந்து போயின. இந்தியாவிலும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்களில், பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

School students form Human candle

இந்த நிலையில் இன்று சென்னை வேலம்மாள் பள்ளியில் மாணவ, மாணவியர் இணைந்து மெழுகுவர்த்திகளை ஏந்தியும், மனிதச் சங்கிலி போல நின்றும் அஞ்சலி செலுத்தியது உருக்கமாக அமைந்தது.

மேலும் இந்த பெரும் துயரமான தருணத்தில் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று எழுதி அதில் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டு இரங்கல்களைத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+