ஜாதிச் சான்றிதழ் வேண்டும்... பூம் பூம் மாடுகளுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பூம்பூம் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியருக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை அடுத்த சக்கிமங்கலம் எல்கேபி நகரில் 'பூம் பூம்' மாட்டை வைத்து தொழில் செய்யும் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் ஆதியன் என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு ஜாதிச் சான்று வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பூம் பூம் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications