நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்த பாதிரியாருடன் 'எஸ்' ஆன ஆசிரியை..!
கன்னியாகுமரி: திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவர் முதுகலை பட்டதாரி. வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பாதிரியார் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலு்ம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது காலபோக்கில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் பிலமினோவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஓட்டல் மேலாளராக இருக்கும் நித்திரவிளையை சேர்ந்த ஒருவரை பிலோமினாவை பேசி முடித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சியர்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை பாதிரியார் பீட்டர் தான் நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் பிலோமினா மார்த்தாண்டம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். மாலை பிலோமினாவின் தாயை பீட்டர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்கள் மகள் பிலோமினாவை நீங்கள் தேட வேண்டாம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து ஊரை விட்டு செல்கிறோம் என பீட்டர் கூறி விட்டு இணைப்பு துண்டித்து விட்டார். இதனால் பதறி போன பிலோமினாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொள்ள பலவழிகளில் முயன்றனர். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதுகுறித்து பிலோமினாவின் தாயார் களியாக்கவிளை போலீசார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயித்த ஆசிரியை பாதிரியாருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications