தஞ்சையில் சீல் வைத்த வாக்குப்பதிவு எந்திரம் திறப்பு: மறுதேர்தல் நடத்த டி.ஆர்.பாலு கோரிக்கை!
தஞ்சை: தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மண்டல அலுவலர் மணிகண்டன், வாக்குப் பதிவு எந்திரத்தின் சீலை திடீரென உடைத்தார். இதனை அந்த வழியாக சென்ற முகவர் ஒருவர் பார்த்துவிட்டு மற்ற வாக்குச்சாவடிகளில் இருந்த திமுகவினருக்கும், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த டி.ஆர்.பாலு மற்றும் திமுகவினர் அந்த அதிகாரியை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த டி.எஸ்.பி. சுகுமாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அப்படி இருக்க வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்ட பிறகு ஒரு பெட்டியை ஜோனல் ஆபீசல் திறந்துள்ளார். இந்த செயல் தவறானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது.
மேலும், அந்த பெட்டியை எதற்காக அந்த அதிகாரி திறந்தார் என்று தெரியவில்லை. எனவே, அந்த பகுதியில் மட்டும் மறுவாக்குப் பதிவு வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications