30 கி. தங்கம், 400 வளையல், 500கி. வெள்ளி, 10,000 சேலை- 200 செருப்பு- போயஸ் முதல் ரெய்டில் சிக்கியவை
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஐடி அதிகாரிகள் 1996-ம் ஆண்டுக்கு பின்னர் 2-வது முறையாக நுழைந்து அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருப்பது 2-வது முறையாகும்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 1996-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் முறையாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

10,000 சேலைகள்
ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. 100 உயர் ரக வாட்சுகள், 30 கிலோ தங்கம், 400 ஜோடி வளையல்கள், 500 கிலோ வெள்ளி, 10,000 சேலைகள், 250 ஜோடிகள் இறக்குமதி செய்யப்பட்ட செருப்புகள் அப்போது கைப்பற்றப்பட்டன. இந்த ரெய்டுக்கு தலைமை வகித்தவர் நல்லம நாயுடு.
அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா பார்க்க வேண்டிய கோப்புகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 2 அறைகளை சோதனையிடத்தான் 2-வது முறையாக போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications