தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது
தூத்துக்குடியில் விதிக்கப்பட்ட 144 தடை திரும்பப்பெறப்பட்டது. இயல்பு நிலை திரும்புவதால் 144 தடை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் போராடி வந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் நடத்திய அமைதி பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இதுவரை மத்திய அரசு இந்தத் கண்டனமும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக பிரதமர் மோடி இப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட தெரியாதது போல இருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது, கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இடையில் இரண்டு நாட்கள் இணையதளம் கூட முடக்கப்பட்டது. கடந்த ஒருவாரமாக அப்பகுதி மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு அப்படியே இருந்தாலும், பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. கடைகள் திறக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. 144 உத்தரவை வாபஸ் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications