தூத்துக்குடியில் 'ஆபரேசன் சாகர் கவாச்': டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் 'சிக்கினர்'
தூத்துக்குடி: தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆபரேசன் சாகர் கவாச்சில் டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து கடல் வழி பாதுகாப்பை இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதற்காக ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் ரக்சத், ஆபரேசன் பேரிகார்டு என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பை ஓத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நீ்ண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு இந்த ஒத்திகை தொடங்கியது. இன்று 29ம் தேதி மாலை 6 மணி வரை இந்த ஓத்திகை நடக்கிறது. இதில் முதல்கட்டமாக சென்னையில் இரு்ந்து குமரி வரை 13 கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்ட்டது. கடலோர காவல்படை, மரைன் போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர வழியாக செல்லும் ரோடுகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி வான்தீவு பகுதியில் மரைன் போலீசார், கடலோர காவல்படையினர் ஓரு படகில் ரோந்து வந்தனர். அப்போது அந்த வழியாக ஓரு படகில் வந்த 5 பேர் வேறு வழியாக தப்பி ஊடுருவ முயன்றனர். அவர்களை துரத்தி போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் பழைய துறைமுகத்தில் இருந்து ஓரு படகில் தப்பி ஊடுருவ முயன்ற 7 பேரையும் போலீசார் மடக்கினர். அவர்கள் டம்மியாக அனுப்பி வைக்கப்பட்ட தீவிரவாதிகள் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து டம்மி துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதில் தமிழ்நாடு கமண்டோ படையை சேர்ந்த நான்கு பேர், தமிழ்நாடு கடற்படையை சேர்ந்த மூன்று பேர், தமிழ்நாடு காவல்படையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேர் ஓத்திகையில் தீவிரவாதிகளாக இருந்தனர். திறமையாக செயல்பட்டு மடக்கப்பட்ட அவர்கள், தங்களை தப்ப விடாமல் பிடித்ததற்காக மரைன் போலீசாரையும், கடலோர காவல் படையினரையும் பாராட்டினர். இந்த ஓத்திகை இன்று மாலை வரை நடக்கிறது. இதி்ல் மாலை தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாபபு ஓத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும் படியாக வந்த 5 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் டம்மி தீவிரவாதிகள் என தெரிந்தது. அவர்களிடம் இருந்தும் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications