போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு ... ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு ..தொண்டர்களும் குவிந்தனர்!
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்பதால், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தீர்ப்பை நேரில் கேட்பதற்காக அதிமுகவினர் பலர் பெங்களூருவில் குவிந்திருந்தனர். இதனால், கர்நாடக ஹைகோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே, ஆனால், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப் பட்டதால், அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளார். எனவே, போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.

எனவே, போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications