குலுங்கும் கும்பகோணம்... மனித வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்பு பணியில் 20000 போலீசார்!
கும்பகோணம்: மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுவதால், கும்பகோணத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் சுமார் 20ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது கும்பகோணம் மகாமக திருவிழா. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

கும்பகோணத்தில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்கின்றனர். இதுவரை சுமார் 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர். இன்று ஒருநாளில் மட்டும் கும்பகோணத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 10 ஆயிரம் போலீசார் கும்பகோணத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

போலீசார் மட்டுமின்றி என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
மனித வெடிகுண்டு மிரட்டல்:
முன்னதாக கும்பகோணம் மகாமகத் திருவிழாவை சீரழிக்கும் வகையில், 4 மனித வெடிகுண்டுகள் குளத்தைச் சுற்றி வருவதாகக் குளக்கரையில் தாற்காலிகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மக் கடிதம் வந்தது.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை முதல் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். இந்தப் பணியில் சுமார் 150 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மகாமகக் குளத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபங்கள், கரையில் நிற்கும் வாகனங்கள், பொருள்களில் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
இது மட்டுமின்றி மகாமகக் குளப் பகுதியில் இரு மோப்ப நாய்களும் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையத்திலும் நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவ முகாம்:
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
வெளியூர்களில் இருந்து தீர்த்தவாரிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே இலவச உணவுகளும், குடி தண்ணீரும் வழங்கப்படுகிறது.
கடந்த 1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே, அசம்பாவிதங்களைத் தடுக்க அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications