மேல இருக்கிறவன் என்றால் அது எம்ஜிஆர், ஜெ.வின் ஆன்மாக்கள் - செல்லூர் ராஜூ அடடே விளக்கம்
மேல இருக்கிறவன் பாத்துக்குவான் என்றால் அது ஜெயலலிதா எம்ஜிஆரின் ஆன்மாக்களை கூறினோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: எங்களுக்கு எல்லாமே ஜெயலலிதா, எம்ஜிஆர்தான். மேல இருந்து அவர்களின் ஆன்மாதான் எங்களை வழிநடத்தி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை... எல்லாத்தையும் மேல இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி . ட்ரம்ப்பே வந்தாலும் பிரச்சினையில்லை எல்லாத்தையும் மோடி பார்த்துக்கொள்வார் என்றார்.
அவர் சொன்னது போலவே, இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்த மறுநாளே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாஜகதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரட்டை இலை
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ, எங்களுக்கு எல்லாமே எம்ஜிஆர், ஜெயலலிதாதான் என்று கூறினார். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்று கூறினால் அவர்களின் ஆன்மாதான் பார்த்துக்கொள்ளும் என்று ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜி
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்னதை வைத்து யாரும் தவறாக பேச வேண்டாம். பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்றால் அவர்தான் இரட்டை இலையை பெற்றுக்கொடுத்தார் என்று கூறக்கூடாது. எங்களுக்கு இருந்த பெரும்பான்மை ஆதரவை வைத்தே இரட்டை இலை சின்னமும், கட்சியையும் பெற்றுக் கொடுத்தது.

எங்க எதிரி திமுகவே
ஆர்.கே. நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகதான் எங்களுக்கு எதிரி. ஆர்.கே. நகர் தொகுதியில் எங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். தினகரன் போட்டியிட்டாலும் அவரால் எங்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பே இல்லை. மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள். பிரிவதும், பின்னர் இணைவதும் சகஜம்தான்.

பணப்பட்டுவாடா புகார்
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்தோம் என்பதெல்லாம் பொய்யான பிரச்சாரம். எங்கள் பெயர்களை டைப் செய்து, எழுதி வைத்துள்ளனர். காகிதத்தில் எழுதியது எல்லாம் ஆவணங்களாக கூற முடியுமா? என்றும் கேட்டார் செல்லூர் ராஜூ. என்னமோ போடா மாதவா... பேட்டியை கேட்ட எங்களுக்குத்தான் தலை சுத்துது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications