மீண்டும் தமிழகத்தை இருளில் தள்ளுகிற செயல்!: மின் கட்டண உயர்வு குறித்து சீமான் ஆவேசம்
சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
மக்களைத் திணறடிக்கிற அளவுக்கு மின்சாரத்துக்கு 15 சதவீத கட்டண உயர்வை அறிவித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கடுமையான மின் தட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்சியை ஏற்படுத்தி வந்த தமிழக அரசு, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சாரமே இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டை உருவாக்கி மறுபடியும் மக்களை இருளுக்குள் தள்ளுகிற வேலையைச் செய்திருக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் மண்ணெண்ணெய் விநியோகம் முழுதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பொது விநியோகத் திட்டத்திலிருந்து வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கும் திடீரென தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வீட்டில் விளக்கேற்றக்கூட வழியில்லாத நிலையில் அல்லாடித் தவிக்கிறார்கள். இந்நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் வகைதொகை இல்லாமல் உயர்த்தி அடித்தட்டு மக்களின் நெஞ்சில் இடியை இறக்கியிருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலா ரூ. 1310.23 கோடி மானியம் வழங்கப்படும் எனவும், இதனால் 94 சதவீத மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்திருப்பது மக்களுக்கு எத்தகைய நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. வீடுகளுக்கு 1 முதல் 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 40 காசு உயர்வு,101 முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 45 காசு உயர்வு, 201 முதல் 500 யூனிட் வரை முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 50 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு 60 காசு உயர்வு
500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது எப்படி மக்களைப் பாதிக்காததாக இருக்கும்? அடித்தட்டு கூலி மக்கள் தொடங்கி விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையுமே வஞ்சிக்கக்கூடிய கடுமையான கட்டண உயர்வு இது.
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் மின் பற்றாக்குறை முடிவுக்கு வந்துவிடும் என்றும், மின்சாரம் மிக எளிமையாகக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வார்த்தவர்கள் இத்தகைய கட்டண உயர்வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வே மக்களை அனுதினமும் சாகடித்துவரும் நிலையில், மின் கட்டணமும் இரட்டிப்பு துயரமாகி சித்திரவதைக்கு ஆளாக்கியிருக்கிறது.
மிகப் பரவலாக நடக்கும் மின் திருட்டைத் தடுக்காமலும், அந்நியத் தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வாரி வழங்கியும், மின்வாரியப் பணிகளை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தாமலும் இருப்பதால்தான் மின்சார வாரியம் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறது. இதற்கிடையில் தனியார் மின்சாரத்தைப் பெறுவதிலும் தகுதியான ஆட்களை அணுகாமல் அதிக விலை கொடுத்து வாங்கியும் நஷ்டமாகிவரும் மின்வாரியம் நடப்பாண்டு மிகுதியான நிதிச்சுமையை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாகச் சொல்லி கட்டண உயர்வுக்குக் காரணம் சொல்வது எவராலும் ஏற்க முடியாதது.
எனவே மிகக் கடுமையான மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இல்லையேல், மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையில் எடுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications