For Quick Alerts
For Daily Alerts
Just In
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது: சீமான்
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் சீமான்.
Recommended Video
கல்லணையில் சீமான் ஆவேசம்
சென்னை: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மனசாட்சிப் படி தீர்ப்பளிக்காமல் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று சீமான் கூறியதாவது:
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பு அளிக்கவில்லை. பாரபட்சமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
புதுவைக்கு ஒரு நியாயம்; தமிழகத்துக்கு ஒரு நியாயம் என சென்னை உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. சென்னை மெரினாவை திறந்துவிட்டால் தமிழர்கள் போராடுவார்களே என மத்திய அரசு அஞ்சுகிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
Comments
English summary
Naam Thamizhar Chief Co-Ordinator Seeman had criticised the High Court judgement in 11 MLAs case.
Story first published: Saturday, April 28, 2018, 16:06 [IST]