ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என நாம் தமிழர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: மக்கள் வாக்களித்து முதல்வரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் மக்களின் மனநிலைக்கு நேர் எதிரான செயல்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தரப்பு மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் ரிசார்ட்டிலே ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தபட்டு கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ளது ஜனநாயகத்தையே கேள்விகுறியாக்கியுள்ளது. கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ள எம்.எல்.ஏக்கள் ஒருமித்த கருத்தோடு இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர்களை அங்கிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுகவில் யாரை பொதுச்செயலாளராக தேர்தெடுக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் உரிமை அதே வேளையில் தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தற்போது உள்ள நிலையில் மக்கள் வாக்களித்து முதல்வாரன ஜெயலலிதா இறந்துவிட்டதால் மக்களின் மனநிலைக்கு நேர் எதிரான செயல்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications