நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தமிழறிஞர் நெல்லை கண்ணன் பேசியது ஆட்சிக்கு எதிரான அறச்சீற்றம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசியதால் நெல்லை கண்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வலியுறுத்தி அவர் வீட்டு முன்பாக பாஜகவினர் 10 பேர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நெல்லை கண்னன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவின் நரேந்திரன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!
நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம்.அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.
— சீமான் (@SeemanOfficial) December 31, 2019
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!
2/2
நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!. இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications