கடலூரில் சீமான் படுதோல்வி அடைவார் - 5-வது இடம்தானாம்- தந்தி டிவி கருத்து கணிப்பு
சென்னை: கடலூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடையும் நிலை உள்ளதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. கடலூர் தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் கடலூர் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 31 முதல் 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிடும் சீமான் படுதோல்வி அடையும் நிலை இருப்பதாகவும் அவருக்கு 5வது இடமே கிடைக்கும் என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சீமானுக்கு 4 முதல் 10 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.
கடலூர் தொகுதி:
அதிமுக 31 - 37%
திமுக 27 - 33%
பாமக 10 - 16 %
தமாகா 11 -17 %
நாம் தமிழர் 4 - 10 %
பிற கட்சிகள் 1%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்:கடலூர் தொகுதியில் சீமானுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?#TNPolls2016 pic.twitter.com/vdJmfvm4G4
— thanthitv (@thanthitv) May 13, 2016












Click it and Unblock the Notifications