கவிதையின் பால்வீதிக்கு அழைத்துச் சென்றவர் கவிக்கோ… சீமான் புகழாரம்
கவிதையின் பால்வீதியில் நம்மைத் தன் எழுத்துக்களால் கூட்டிசென்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்ற சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிலேடை மொழி
எளிய நடையும், சிலேடை மொழியும் கொண்டு கூரியக் கருத்துகளும், சீரிய திறனும், மிகுந்து நெஞ்சுரத்தோடு சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் அமுதப் பாக்களை அழகுத்தமிழில் அள்ளித் தந்திட்டப் வானம்பாடி கவிதை மரபின் தனித்துவமான மூத்த படைப்பாளி பெருங்கவிஞர் ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவுச்செய்தியானது மிகுந்த மனவேதனையையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது.

பாக்களின் போர் வீரர்
அவரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் அவர்களது குடும்பத்துயரில் நானும் பங்கேற்கிறேன். கவிதைக்குப் பொய்யழகு என்ற இலக்கணத்தைத் தகர்த்து உண்மையை நெஞ்சுரத்தோடு உலகறியச் செய்யத் தனது தனது பாக்களின் மூலம் போர்தொடுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

புதுக் கவிதை வித்தகன்
பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கிறக் கருத்தோட்டமாக இருந்தாலும், அதனைச் சாடி முற்போக்கு முத்துகளை விதைக்கிற பாங்கினைத் தனது கவிதைகள் மூலம் தந்தவர். தம் கவிபாடும் வல்லமையாலும், தனித்திறனாலும் புதுக்கவிதைத் துறையில் புதுமையில் புகுத்தி நவீன இளைய தலைமுறையினரின் நெஞ்சம் ஈர்த்த இப்பெருங்கவிஞனின் இழப்பு என்பது தமிழ் படைப்புலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!

பால்வீதிப் புலவன்
‘பால்வீதி' கவிதைத்தொகுப்பின் மூலம் தன்னைத் தலைசிறந்த படைப்பாளியாக நிலைநிறுத்திக் கொண்ட கவிக்கோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் அவரது சீரிய பாக்கள் மூலம் தமிழ் படைப்புலகில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். தமிழ் இலக்கிய உலகை ஆண்டுக் கொண்டுதானிருப்பார். கடைசி வரை கொள்கை உறுதியுடன் வாழ்ந்து மறைந்த படைப்பாளிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications