For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளனுடன் சீமான் சந்திப்பு- பரோலை ஒருமாதம் நீட்டிக்க கோரிக்கை

ஜோலார்பேட்டையில் பேரறிவாளனை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று சந்தித்தார்.

By Mathi
Google Oneindia Tamil News

ஜோலார்பேட்டை: வேலூர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து பேரறிவாளன் பரோலை ஒருமாதம் நீட்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

ராஜிவ் கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளவன். கடந்த மாதம்தான் பேரறிவாளனுக்கு முதல் முறையாக பரோல் கிடைத்தது.

Seeman urges to extend Perarivalan's parole for one more month

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் பேரறிவாளன் தங்கியுள்ளார். அவரை சமூக இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மயில்சாகி ஆகியோரும் இன்று பேரறிவாளனை சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Naam Thamizhar Katchi leader Seeman has urged to the extend of Perarivalan's parole for one more month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X