பெண்களுக்கு போலீஸைவிட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான்: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்
அனைவருக்கும் சுயபாதுகாப்பு அவசியம் என ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெண்களுக்கு முதல் பாதுகாப்பு பெற்றோர்தான் எனவும், அனைவரும் சுயபாதுகாப்பை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி நேற்றிரவு 11 மணிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் இளம் ஒருவர் ஏறினார். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த பெண் சற்று நேரத்தில் அசதி காரணமாக தூங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஸ்டேஷனாக வர, வர பயணிகள் இறங்கி சென்றனர்.

இதனால் சத்யராஜ் என்ற 25 வயது இளைஞர் மட்டும் இளம்பெண்ணுடன் அந்த ரயில் பெட்டியில் இருந்தார். ஒருவரும் அங்கு இல்லாத தைரியத்தில் சத்யராஜ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். தூக்கத்திலிருந்து விழித்த அந்த பெண் பதறிபோய், அலறி கத்தினார்.
பக்கத்து பெட்டியில் பயணம் செய்திருந்த ரயில்வே போலீஸ் சிவாஜி என்பவருக்கு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. எனினும் அவரால் உடனடியாக ஓடி செல்ல முடியாமல் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை காத்திருந்து, பிறகு சென்றார். அங்கு பலாத்காரம் செய்ய முயன்றுகொண்டிருந்த அந்த சத்யராஜை பிடித்து, ரயில்வே போலீசில் சிவாஜி ஒப்படைத்தார்.
எனினும் பலாத்கார அதிர்ச்சியிலிருந்த அந்த பெண் மயக்கடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை ஐ.ஜி.பொன்மாணிக்கநேரில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பேசினார். பெண்களுக்கு போலீஸைவிட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான். அந்த இளம்பெண் இரவு 11 மணி, தனியாக பயணம் செய்துள்ளதுடன், பெண்களுக்கான பெட்டியில் ஏறாமல் பொதுவான பெட்டியில் ஏறியுள்ளார். பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி சாதகமாக பயன்படுத்தி கொண்டான். பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடம் முக்கால்மணி நேரம் விசாரணை நடத்தினேன்.
பாலியல் தொல்லை கொடுத்த நபரை விட்டுவிடக்கூடாது. தூக்கில் போட வேண்டும். குற்றவாளிக்கு 10 சிறைதண்டனையாவது நிச்சயம் கிடைக்கும். வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற துயரம் நேரக்கூடாது. அனைவரும் முதலில் சுயபாதுகாப்பை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இளம்பெண்ணை மீட்ட ரயில்வே எஸ்.ஐ. சுப்பையா, காவலர் சிவாஜி ஆகியோரை பாராட்டிய பொன்.மாணிக்கவேல் இருவருக்கும் தலா ரூ.5000 வெகுமதியாகவும் வழங்கினார்.
-
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
கடலில் விரியும் ‘மெகா’ பிளான்.. சென்னையை அடியோடு மாற்ற போகும் திட்டம் இதுதான்.. ப்ளூ பிரிண்ட் ரெடி -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications