செல்வமகள் சேமிப்பு திட்டம்..என்னாது, ரூ.50 செலுத்தினால், இத்தனை லட்சம் ரிட்டனா? மத்திய அரசு அசத்துதே
சென்னை: அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி உங்கள் சேமிப்பை தொடங்குவது தெரியுமா? ரூ. 50 செலுத்தி எதிர்காலத்தில் ரூ. 8 லட்சம் வரை ரிட்டன் பெற முடியும் என்கிறார்கள்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான், செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டமாகும்..
மெச்சூரிட்டி பணம்: உங்கள் பெண் குழந்தை வளர்ந்தபிறகு, அவருக்கான கல்வி, தொழில், திருமணம் போன்ற தேவைகளுக்கு இப்போதே சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகச்சிறந்த வழிமுறையாகும். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தையும் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்துவர வேண்டும். 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பணம் கிடைக்கும்.

இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்... ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
சேமிப்பு திட்டம்: உங்கள் மகள் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஆக வருடத்துக்கு மொத்தம் 24,000 ரூபாய் முதலீடு செய்கிறோம். 15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாயாகும்.. இப்போது, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதத்தில் 21 வருடங்கள் கழித்து மெச்சூரிட்டியின்போது மொத்த ரூபாய் 11,16,815 கிடைக்கும். அதாவது, வட்டி வாயிலாக மட்டுமே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.. இப்போது, அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்தபட்சமாக ரூ. 50 செலுத்தியும் உங்களது சேமிப்பை தொடங்கலாம்... இதனால், ரூ. 8 லட்சம் வரை எதிர்காலத்தில் ரிட்டன் பெற முடியும்..
சபாஷ் திட்டம்: அதே போல செல்வமகள் திட்டத்தில் மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் 8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.16 லட்சம் கிடைக்கும்... இந்த திட்டத்தில், உங்களுக்கு குழந்தைக்கு 18 வயது ஆகும் போது பாதித்தொகையை நீங்கள் பெற்று கொள்ளலாம். மீதித்தொகை பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் போது பெற்று கொள்ளும் வசதியும் உண்டு...
இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலைகளை செய்கின்றன. அதனால், அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். இது தவிர பொதுத்துறை வங்கிகளான SBI, போன்ற வங்கிகளின் இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் என்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பு இந்த திட்டத்துக்கு கிடைத்து வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications