தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் எஸ். செம்மலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. முதல்வராக இன்று ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Semmalai to take oath as interim speaker today

இதையடுத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ராஜ்பவனில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தற்காலிக சபாநாயகராக எஸ். செம்மலை பதவியேற்றுக் கொண்டார்.

அதிமுகவைச் சேர்ந்த செம்மலை முன்னாள் அமைச்சர் ஆவார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் சட்டசபை கூடவுள்ளது. அப்போது புதிய உறுப்பினர்களுக்கு செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும் சபாநாயகர் தேர்தலையும் அவரே நடத்துவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+