செங்கோட்டையில் மார்ச் 25 முதல் 27 வரை ரயில் சேவை நிறுத்தம்.. தென்காசி வரை மட்டும் இயக்கம்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ரயில் சேவைகள் தென்காசி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது தீவீரமடைந்துள்ளது. இந்த ரயில் பாதை பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடித்து ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே தென்னக ரயில்வே தலைமை கட்டுமான பொறியாளர் பிரபல்குமார், உதவி தலைமை பொறியாளர்கள் சாம்சன் ஜெயக்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் செங்கோட்டை ரயில் நிலையத்தில் புதிதாக நடை மேடை 4,5,6 ஆகியவற்றை அமைக்கும் பணிகள், செங்கோட்டை- பகவதிபுரம் ரயில் பாதை பணிகளைப் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரபல்குமார் கூறுகையில், செங்கோட்டை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு 4,5,6 ஆகிய நடைமேடை பணிகள் முழுமையான நிறைவடைய உள்ளன.

இதனால் வரும் 25-ந் தேதி முதல் முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் ரயில் போக்குவரத்து தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை- சென்னை, செங்கோட்டை -திருநெல்வேலி ,செங்கோட்டை - மதுரை ரயில்கள் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications