தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து கேள்விக்கு எஸ்கேப்பான செங்கோட்டையன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்க அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து பதிலளிக்க அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி தர தமிழகம் மறுத்து வருகிறது. இந்தி மொழி கற்பிக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதால் அந்த பள்ளிகளைத் தொடங்க தமிழகத்தில் மறுப்பு தெரிவித்தப்பட்டு வந்தது.

எனினும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகள் தொடங்க
நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
அப்போது அவரிடம் நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நவோதயா பள்ளி வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அது குறித்து தற்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications