For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் மூத்த நக்சல்பாரி தலைவர் கோவை ஈஸ்வரன் காலமானார்

தமிழகத்தின் முதுபெரும் நக்சல் தலைவர் கோவை ஈஸ்வரன் காலமானார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான முதுபெரும் இடதுசாரித் தலைவர் கோவை ஈஸ்வரன் நேற்று காலமானார்.

தமிழகத்தில் 60களின் இறுதியில் சாருமஜூம்தார் தலைமையிலான நக்சல்பாரி இயக்கத்தை நிறுவியவர்களில் கோவை ஈஸ்வரனும் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட்(மா-லெ) கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கோவை ஈஸ்வரன்.

Senior Leftist Leader Kovai Eswaran passes away

இடதுசாரிகளின் வர்க்க போராட்டங்கள் மற்றும் தமிழக நலன் சார் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கோவை ஈஸ்வரன். வயது முதுமையடைந்தாலும் அவர் குரல் பொதுகூட்டங்களில் கணீரென ஒலிக்கும்.

உடநலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு அவரது உயிர் பிரிந்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இலத்தில் மக்கள் அஞ்சலிக்காக கோவை ஈஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

கோவை ஈஸ்வரன் மறைவுக்கு இடதுசாரி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English summary
Senior leftist leader Kovai Eswaran passed away on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X