ஜல்லிக்கட்டு காளைகளை கோசாலைகளுக்கு அனுப்புங்கள்: ராம.கோபாலன்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, காளைகள் கசாப்பிற்கு விற்கப்படுவதை தடுக்க, தமிழக அரசு காளைகளை மீட்டு கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு சமீபத்தில் நீதிமன்றத் தடை விதிக்கப் பட்டது. தடைக்கு எதிராக தமிழக அரசு முறையீடு செய்ய வேண்டும் என பலதரப்பிலிருந்தும் குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஜல்லிக் கட்டுக் காளைகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக விற்கப் படுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், கசாப்பிற்கு செல்லும் காளைகளை காப்பாற்றி கோசாலைக்கு அனுப்ப வேண்டும் என ராம்.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
கசாப்புக் கடைக்கு விற்கப்படும் காளைகள்...
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள் கசாப்பிற்கு விற்பது குறித்து பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது கடமை...
விவசாயிகளின் முதுகெலும்பும், சுற்றுச்சூழலுக்கு வளம்சேர்ப்பதும் காளைகள், பசுக்கள். இவற்றை பாதுகாப்பது நமது கடமையாக நினைக்க வேண்டும். பராமரிக்க இயலாதவர்கள் கோசாலைவிற்க்கு அனுப்ப வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
நடவடிக்கை...
ஜல்லிக்கட்டு காளைகள் கசாப்பிற்கு விற்பதை உடனடியாக தடுத்து நிறுத்த பராமரிக்க இயலாதவர்களிடம் இருந்து காளைகளை விலை கொடுத்து வாங்கி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும் கோசாலைகளுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்முறையீடு...
மேலும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப்பேசி, ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற தேவையான திருத்தங்களை வரைமுறைப்படுத்திட முன்வரவேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுகிய கால குத்தகை...
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலங்களில் கிழங்கு வகைகளைப்பயிரிட ஏழைகளுக்கு குறுகிய கால குத்தகையாக அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும். கிழங்குவகை பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. குறுகியகாலத்திற்கு குத்தகைக்கு கொடுத்துத் திரும்ப பெறும் வகையில் நிர்வாகம் செய்தால், மக்களுக்கும் பயன்படும், பினாமிகள் கையில் அரசு நிலங்கள் சிக்கமாலும் காத்திடலாம். எனவே தமிழக அரசு ஏழை விவசாயிகளுக்கு குறுகிய கால குத்தகைக்கு அரசு தரிசு நிலங்களை அளிப்பது குறித்த நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications