தமிழிசை குறித்து அவதூறு... கொந்தளித்த பாஜக.. 4 இடங்களில் நாஞ்சில் சம்பத் மீது போலீஸில் புகார்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது 4 இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழிசை சௌந்தரராஜனை அவதூறாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது பாஜக நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில் 4 இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத்தின் வீட்டை பாஜக நிர்வாகிகள் நேற்றிரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications