வங்கிகள் நமது அக்கவுண்டில் இருந்து எப்படியெல்லாம் பணத்தை எடுக்கின்றன தெரியுமா?
சென்னை: வங்கி சேவையை பயன்படுத்தும் நாம், அவை எதற்கெல்லாம் நம்மிடமிருந்து பணத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் சிறுக சிறுக அவை எடுக்கும் தொகையை கூட்டி பார்த்தால், அடேங்கப்பா.. என கூறும் அளவுக்கு அது பெரிதாக வந்து நிற்கும்.
இப்படி, வங்கிகள் எந்தெந்த சேவைகளுக்கெல்லாம், நமது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கின்றன, அல்லது அபராதம் விதிக்கின்றன என்பதை பார்க்கலாம் வாருங்கள்:

வங்கிகள் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை அக்கவுண்டில் இருப்பு வைத்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். அவ்வாறு குறிப்பிட்ட கையிருப்பைவிட குறைந்துவிட்டால், அதற்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து அபராத தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன.
பண பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கும்போதும் சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. உதாரணத்திற்கு யாருக்காவது வாடிக்கையாளர் ஒருவர் காசோலை கொடுத்திருக்கலாம். அந்த நபர், பணம் எடுக்கும் முன்பாக, ஏதோ ஒரு காரணத்துக்காக வாடிக்கையாளர் அந்த பரிமாற்றத்தை நிறுத்த வங்கியை கோரலாம். அந்த சமயங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகளில் இச்சேவை இலவசம்.
டெபிட் கார்ட் பயன்பாட்டுக்காக கட்டணம் வசூலிக்கும் வங்கிகளும் உண்டு. ரூ.100 முதல் ரூ.500க்குள் இதுபோல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வங்கியிலுள்ள பண இருப்பு, பண பரிமாற்றம் போன்றவற்றை தெரிவிக்க இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வங்கிகள் அளிக்கின்றன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வங்கி பரிவர்த்தனை குறித்த பேங்க் ஸ்டேட்மென்ட்டை வாடிக்கையாளர்கள் கேட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு நமது வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணம் செல்ல ஏற்பாடு செய்ய முடியும். இ.எம்.ஐ,, லோன் போன்றவற்றின் போது இப்படித்தான் நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை என்றால் வாடிக்கையாளரிடம் வங்கி அபராதம் வசூலிக்கிறது.
நெட் பேங் அல்லது, ஏடிஎம் டெபிட்கார்டு பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கூட சில வங்கிகள் புதிய பாஸ்வேர்ட் உருவாக்க கட்டணம் வசூலிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications