குமரி மீனவர்கள் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக 7 பேர் கைது
கன்னியாகுமரி மீனவரள் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓகி புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி தொடர் போராட்டங்களில் குமரி மாவட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழித்துறையில் 12 மணிநேரம் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தையும் குமரி மக்கள் நடத்தினர்.

இப்போராட்டம் தொடர்பாக 5,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் குமரி மீனவர்களை போராட தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அன்பு, கோவில்பட்டி கணேசன், மாரிமுத்து, கடையநல்லூர் முகம்மது ஆனஸ், பாளையங்கோட்டை கிங்ஸ்ஸன், சென்னை மருது ஆகியோர் மீது கொல்லங்கோடு போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.












Click it and Unblock the Notifications