பாலியல் குற்றச்சாட்டு கூறிய வேளாண் மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த சென்னை மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.
தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

எனினும் அந்த இரு பெண் பேராசிரியர்கள் இருவரும் அந்த மாணவியை சமாதானம் செய்து தங்கபாண்டியனுடன் அனுப்புவதற்காகவே திட்டமிட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான அறிக்கையை அவர் எஸ்பி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அதன் மீது எஸ்பி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்துவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கூறிய மாணவியிடம் டிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார்.
இதையடுத்து தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications