வெளிமாநில பெண்களை விருந்தாக்கும் புரோக்கர்கள்.. மதுரையில் களைகட்டும் பாலியல் தொழில்.. பகீர் தகவல்
மதுரையில் வாடிக்கையாளர்களின் ஆசையை நிறைவேற்ற வடமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: மதுரையில் வாடிக்கையாளர்களின ஆசைக்காக வடமாநில பெண்களை வைத்து நடத்தப்படும் பாலியல் தொழில் அதிகரித்துள்ளது. இதனை போலீசார் கண்டும் காணாதது போல் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க அரசு உடடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆடம்பர ஆசை காட்டி பெண்களை சித்ரவதை செய்து பாலியல் தொழிலை நடத்தி வருகின்றனர். மதுரையில் பாலியல் தொழில் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது. வாடகைக்கு வீடுகளை பிடிக்கும் புரோக்கர்கள் அங்கு பாலியல் தொழிலை படுஜோராக நடத்தி வருகின்றனர்.
மதுரை தல்லாகுளம், கரிமேடு, தபால் தந்தி நகர், கடச்சனேந்தல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வடமாநில பெண்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆடம்பர ஆசையில் விழுந்த பெண்கள்
குடும்ப பெண்களை ஆடம்பர ஆசை காட்டி அழைத்து வந்து புரோக்கர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிமாநில பெண்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவம் தற்போது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டுகொள்ளாத போலீசார்
வெளிமாநில பெண்களை ரகசியமாக கடத்தி வந்து இத்தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புரோக்கர்கள் மீண்டும் தொழிலை விரிவுபடுத்தி எண்ணிக்கையை அதிகரித்து செல்வதாக தெரிகிறது.

வாடகை வீடுகளில் தொழில்
மதுரை அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புரோக்கர்கள் வீடுகளை அதிகளவில் வாடகைக்கு எடுத்து தொழிலை செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரங்களில் ஆண்களுக்கு சமமாக மது குடித்துவிட்டு பெண்கள் கும்மாளம் போடுவதை பல முறை கண்டித்து, போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சிக்கி தவிக்கும் பெண்கள்
ஆனால் போலீசார் கட்டிங்பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளமல் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.மதுரையின் பல்வேறு இடங்களில் வெளி மாநில பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மொழி தெரியாமல் தவிக்கும் தங்கள் பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமால் சிக்கி தவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

உடனடி நடவடிக்கை தேவை
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க அரசு உடடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications