7ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அசிங்கம்.. ஆயுர்வேத வைத்தியர் கைது
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆவடி அருகே 7-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆரிய வைத்தியசாலை வைத்தியரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஆவடி அடுத்த அரிக்கமேடு, லக்ஷ்மி நகர் பகுதியில் ஆரிய வைத்தியசாலை நடத்தி வருபவர் வைத்தியர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 27-ம் தேதி தனது வைத்தியசாலை அருகே விளையாடி கொண்டு இருந்த 7-ம் வகுப்பு மாணவனை தலை முடிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் நினைவு இழந்த மாணவன் கடந்த 15 தினங்களாக சுய நினைவு இழந்து பித்து பிடித்து இருந்துள்ளார். இதை அடுத்து விவரம் அறிந்த மாணவனின் பெற்றோர் ஆரிய வைத்தியசாலை வைத்தியர் ராதாகிருஷ்ணன் மீது ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போஸ்கோ சட்ட பிரிவில் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.