சேஷல்ஸ் தீவில் “இந்தியர் தினம்”... நேரில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை: சென்னை: செஷல்ஸ் தீவில் நடைபெறவுள்ள இந்தியர் தினக் கொண்டாட்டத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயின்ட் ஆங்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள சேஷேல்ஸ் நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயிண்ட் ஆங்கே, இன்று திமுக பொருளாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதியன்று சேஷல்ஸ் தீவில் நடைபெறவுள்ள "இந்தியர் தினம்" நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பிதழ் வைத்தார்.
இந்த சந்திப்பின்போது சேஷல்ஸ் நாட்டிற்கான தமிழகத்தின் தூதர் எம்.எஸ்.சாய், "சேஷேல்ஸ் - இந்தியா" இந்தியர் சங்கத்தின் தலைவர் கே.ராமகிருஷ்ணன், கண்ணன், தீபன் குரூப்ஸ் சண்முகம் மற்றும் வெங்கட் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications