பணமதிப்பிழப்புக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்ககேடு: ப. சிதம்பரம் கடும் சாடல்

பண மதிப்பிழப்புக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்கக் கேடானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்க கேடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

பணமதிப்பிழப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று தமது ஆண்டறிக்கையில் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

Shame on RBI which recommended demonetisation, says Chidambaram

அதில் சிதம்பரம் கூறியுள்ளதாவது:

பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர் மொத்த பணத்தில் 1 விழுக்காடுதான் திரும்பி வந்துள்ளது. 99% பணம் சட்ட ரீதியாக மாற்றப்பட்டுள்ளது.

அப்படியெனில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டதா? என்கிற கேள்வி எழுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு யோசனை சொன்ன ரிசர்வ் வங்கியின் செயல் வெட்கக் கேடானது.

ரிசர்வ் வங்கிக்கு ரூ16,000 கோடி வந்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ21,000 கோடி செலவு செய்துள்ளனர்.

அதாவது 1 சதவீத கருப்பு பண புழக்கத்தைத் தடுக்க ரூ21,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சிதம்பரம் சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+