சுவாதி படுகொலை... சமூகத்தின் பொறுப்பு என்ன?.. உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்!

Subscribe to Oneindia Tamil

இளம் பெண் சுவாதி படுகொலை பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைத் தடுக்க அப்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் முன்வரவில்லை என்பதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோன்ற கொடூரக் கொலைகள் தொடர் கதையாகி வருகின்றன.

Share your views on Swathy murder

உடுமலைப்பேட்டையில் ஜாதி மாற்றுத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை பட்டப் பகலில் வைத்து கொடூரமாகத் தாக்கியது ஜாதி ஆணவக் கும்பல். இதையும் தடுக்க அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சிக்கவில்லை. வேடிக்கைதான் பார்த்தனர். விளைவு.. ஒரு அப்பாவி இளைஞன் பரிதாபமாக உயிரிழந்து போனார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதுபோன்ற படுகொலை சம்பவங்களைத் தடுக்க என்ன வழி.. இதில் பொதுமக்கள், அரசு, காவல்துறையின் பங்கு, பொறுப்புணர்வு என்ன என்பது குறித்து எங்களிடம் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கொலை நடந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்பதையும் சொல்லலாம். உங்களது யோசனைகள் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு உதவக் கூடும்.

உங்களது பெயர், இமெயில் முகவரி அவசியம். புகைப்படம் இணைத்தும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி [email protected]

(தனிப்பட்ட முறையில் சுவாதி குறித்த, பெண்கள் குறித்த விமர்சனங்களைத் தவிர்க்கவும். முற்றிலும் சமூக விழிப்புணவு தொடர்பான கருத்துக்களை மட்டுமே வரவேற்கிறோம்.)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+